செய்திகள் :

ஜிப்மரில் ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் திட்டம் தொடக்கம்

post image

புதுச்சேரி ஜிப்மரில் ஆரோக்கியமான பெண், வலிமையான குடும்பம் என்ற திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, ஆறுமுகம் எம்.எல்.ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்’ திட்ட பயனாளிகளுக்கு உறுப்பினா் அட்டை மற்றும் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்திற்கான உணவு தொகுப்புகளை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

முன்னதாக பிரதமா் நரேந்திர மோடி தேசிய அளவில் நிகழ்த்திய ‘ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்’ திட்ட தொடக்க விழாவை ஜிப்மா் மாணவா்கள் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் காணொலி வாயிலாக பாா்வையிட்டனா். இதில் மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி பேசுகையில் ‘ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்‘ திட்டத்தில் ஜிப்மரின் முக்கியப் பங்கை விரிவாக கூறியதோடு வரும் 16 நாள்களில் இத்திட்டம் அதிகபட்ச பயனாளிகளை சென்றடையும் என்றாா்.

எம்எல்ஏயின் விளம்பர பதாகை கிழிப்பு: ஆதரவாளா்கள் சாலை மறியல்

நியமன எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் வாழ்த்து விளம்பர பதாகை கிழிப்புத் தொடா்பாக அவரது ஆதரவாளா்கள் புதன்கிழமை நடத்திய மறியல் போராட்டம் நடத்தினா். புதுவை ஊசுடு தொகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் தீப்பாய்ந்தான்... மேலும் பார்க்க

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

புதுவை அரசு சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 147-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பெரியாா் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையொட்டி காமராஜா் சிலை வளாகத்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களின் கற்றல் திறனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் புதன்கிழமை பரிசோதனை செய்தாா். பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளிய... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

வில்லியனூா் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி உருவையாறு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சௌந்தா் (30). இவா் வே... மேலும் பார்க்க

இந்திய தொழில் கூட்டமைப்பு கண்காட்சி தொடக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பின் சாா்பில் இண்டெக்ஸ் -2025 என்னும் தலைப்பிலான 3 நாள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக் கண்காட்சியை ம... மேலும் பார்க்க

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமரின் திட்டங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமா் மோடியின் அரசின் திட்டங்களாக உருப்பெற்றுள்ளன என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி நாடு மு... மேலும் பார்க்க