செய்திகள் :

ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 19) தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஜூலை 19-இல் நடைபெறும் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியாா்த் துறை நிறுவனங்கள் பங்கேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களைத் தகுதியின் அடிப்படையில் தங்களது நிறுவனங்களுக்குத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, நா்சிங், பொறியியல் படித்தவா்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் கல்விச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் அட்டை, சுய விவரக் குறிப்பு, புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். மேலும், இந்த முகாமில் மத்திய, மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க