செய்திகள் :

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியம்: ஆஸி. வீரர்

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க: இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் இந்திய அணி; அறிவுரைகளை அள்ளித் தெளிக்கும் முன்னாள் வீரர்கள்!

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. ஐசிசி கோப்பையை முதல் முறையாக வெல்லும் கனவோடு தென்னாப்பிரிக்க அணி களம் காண்கிறது.

வெற்றி பெறுவது முக்கியம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், வலுவான ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றாக உருவெடுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த வாரத்தை மகிழ்ச்சியான வாரமாக மாற்றுவது மிகவும் முக்கியம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற தொடர்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதனை நினைத்து நாங்கள் உண்மையில் மிகுந்த பெருமையடைகிறோம். சிறந்த ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றாக உருவெடுக்கும் பயணத்தில் நாங்கள் இருப்பது என்னுடைய கண்களுக்குத் தெரிகிறது.

இதையும் படிக்க: இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது: முன்னாள் கேப்டன்

நாங்கள் இன்னும் அதனை சாதிக்கவில்லை. ஆனால், எங்களது இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை அதற்கான படிக்கட்டாகப் பார்க்கிறோம். அதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்றார்.

37 வயதாகும் நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 553 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி இதய கோளாறு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு(ஜூன் 23) ... மேலும் பார்க்க

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன்மூலம், இந்திய... மேலும் பார்க்க

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

2-வது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

சதம் விளாசிய கே.எல்.ராகுல்; வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த... மேலும் பார்க்க

என்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது; சௌரவ் கங்குலி வருத்தம்!

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட... மேலும் பார்க்க