செய்திகள் :

`டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்!

post image

சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் புள்ளிகளின் கட்சி மாற்றம், கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முக்கியமாக அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிரடி மாற்றங்களுக்காக அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது. அண்ணாமலைக்கு பாஜகவில் பவர்ஃபுல்லான பதவி கிடைக்க போகிறது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மூலம் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வம்

வீட்டில் விருந்து வைத்த அண்ணாமலை?

கோவையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகி இல்ல விழாவில், அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் கடந்த சில நாள்களுக்கு முன்பே கோவை வந்துவிட்டார்.

அண்ணாமலை தன்னை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பதாக தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் கோவை வீட்டில் அவர் தினகரனை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரனுக்கு அண்ணாமலை வீட்டில் விருந்து வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, " எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைய இருக்கின்றன. இதுதொடர்பாக எங்கள் கட்சி தேசிய தலைவர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன்.

கூட்டணியில் இருந்து விலகியவர்களை இணைக்கும் பணியை, டெல்லி தலைவர்கள் மாநில தலைவர் பார்த்துக் கொள்வார்கள். கூட்டணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களுடன் நட்பை தொடர வேண்டும் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒதுக்கிவிட்டனர். எங்கள் கூட்டணியில் இன்னும் வர வேண்டியவர்கள் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்." என்றார்.

இஷா சிங்: 'மும்பை பின்னணி, மனித உரிமை ஆர்வலர்' புதுவையில் ஆனந்திடம் கறார் காட்டிய பெண் காவலர் யார்?

கட்சி ஆரம்பித்த பிறகு புதுச்சேரியில் முதல் முதலாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நி... மேலும் பார்க்க

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அத... மேலும் பார்க்க

``புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கத்துக்கணும்" - த.வெ.க தலைவர் விஜய் தாக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார்.புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொத... மேலும் பார்க்க

Amit Shah: "தயாராக இருங்கள் ஸ்டாலின்..!" - திமுகவுக்கு அமித் ஷா நேரடி சவால்

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டில் பீகாரைப் போலவே தோல்வியடையும் என சவால் விடுத்திருக்கிறா... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``உங்களால நிறைய பேர் இறந்தாங்க" - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த அக்டோபரில் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிறகு வெளியில் பரப்புரை, சுற்றுப்பயணம், பிரசாரம் என எதையும் அவர் மேற்கொள்... மேலும் பார்க்க