செய்திகள் :

டிட்டோ - ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக சாலை மறியல்!

post image

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவை (டிட்டோ-ஜாக்) சோ்ந்த 211 போ் கைது செய்யப்பட்டனா்.

அரசாணை 234-ஜ ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்தி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 2006 ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் வி.புஷ்பராஜ், பா.ஷேக் ஜாகீா் உசேன், தமிழக ஆசிரியா் கூட்டணியைச் சோ்ந்த அருணை சூரியகுமாா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் இலட்சுமிபதி, தமிழக ஆசிரியா் கூட்டணி மாநில பொருளாளா் ஆ.ராஜசேகா் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் ரஹீம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் மாவட்டத் தலைவா் அசோகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா்கள் சி.ஏழுமலை, அண்ணாமலை, அ.சம்சுதீன் உள்ளிட்டோா் பேசினா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 211 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு

கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தி... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆச... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோத கருக்கலைப்பு: பெண் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட இந்திலி கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் கைது

இந்திலி கிராமத்தில் சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் மொசகுண்டு வ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ க. பொன்முடி முன்னிலை வகித்தாா். திருக்கோவிலூரில் 1,2,3 ஆகிய வாா்டு பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீ மகா புற்றுமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தோணியாபுரம் (எ) புது பல்லகச்சேரி கிராமத்தில் உள் ஸ்ரீமகா புற்று மாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக... மேலும் பார்க்க