செய்திகள் :

'தகரக் கதவுகள்… பூட்டு இல்லை… ஃபிரிஸர் இல்லை' - இடியும் நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை கட்டிடம்

post image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், திருச்சுழி, காரியாப்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

இடியும் நிலையில் பிணவறை
இடியும் நிலையில் பிணவறை

அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை விபத்தில் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், விஷக்கடி, இடி மின்னல் மூலம் இறப்பவர்கள், கொலைச் சம்பவத்தால் இறப்பவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைப்பார்கள்.

அரசு மருத்துவமனையாக மட்டுமே இயங்கி வந்த இந்த மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ரூ. 31 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

பல சிறப்பம்சங்கள் கொண்ட மருத்துவமனையாக மாறி வரும் இம்மருத்துவமனையில் பிணவறைக் கட்டிடம் மட்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிலையில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம், “பிணவறைக் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து கதவு, ஜன்னல்கள் பெயர்ந்து கிடக்கின்றன. உடைந்த மரப்பலகைகள் வைத்து மறைத்திருக்கிறார்கள்.

இடியும் நிலையில் பிணவறை
இடியும் நிலையில் பிணவறை

பிணவறை உள்ளே பரிசோதனை மேடை இடிந்துள்ளது. தகரக்கதவுகளுக்கு பூட்டு போடாததால் கம்பியால் இழுத்து கட்டியிருக்கிறார்கள். கதவு இடைப்பகுதி, ஜன்னல் இடைப்பகுதி வழியாக துர்நாற்றம் வீசுகிறது. கரண்ட் உள்ளது. ஆனால், இங்குள்ள ஒன்றிரண்டு ஃபிரீசர் பாக்ஸ்களும் பழுதாகி உள்ளது. இந்த நிலையில், பிணவறையின் வெளிப்பகுதியில் உடல்களை வைப்பதால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது.

ஃபிரீசர் பாக்ஸ் வைத்து பிரேதப் பரிசோதனை வரை உடலைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் உயிரிழந்தவரின் உறவினர்கள் அவர்களின் சொந்த செலவில் வெளியில் வாடகைக்கு எடுத்துதான் வைக்க வேண்டியுள்ளது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.2,000 வரை செலவாகிறது. உயிரை உறவை இழந்த இந்தத் துக்கமான நிலையிலும்கூட உடல்களைப் பாதுகாப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.

இடியும் நிலையில் பிணவறை
இடியும் நிலையில் பிணவறை

எனவே விரைந்து நவீன முறையில் குளிரூட்டும் வசதியுடன்கூடிய பிணவறையைக் கட்டிட மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் கொண்டு வந்தபோது பிணவறை கட்டிடத்தின் நிலை குறித்து இறந்தவரின் உறவினர்கள் கட்டிடத்தின் நிலை குறித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக் கொன்ற முதியவர்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மீதிக்குடியைச் சேர்ந்த காமாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

நெல்லை: `எவ்வளவு சொல்லியும் கேட்கலை...'- செல்போன் பேச்சால் ஆத்திரம்; அக்காவை கொன்ற தம்பி

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி மேல கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், ராகுல் மற்றும் முத்துகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம், விவசாயம... மேலும் பார்க்க

திருச்சி: காதலனுடன் விடுதியிலிருந்த இளம்பெண் மரணம்; போதை ஊசி காரணம்?

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம் உசேன்(வயது: 19). இவர், அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது யாஸ்மின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண் திருமணம் உள்ளிட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுலகத்தில் குட்கா பறிமுதல்; காங்கிரஸ் பிரமுகரிடம் விசாரணை

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் (ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்டு) நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

கோவை ஈஷா யோக மையத்தில் வாலிபர் மர்ம மரணம்; காவல் துறையின் விளக்கம் என்ன?

விழுப்புரம் மாவட்டம், சிறுவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், நேற்றிரவு கார்த்திக் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்... மேலும் பார்க்க

நாகை: செயின் திருட்டில் சிக்கிய தவெக பொறுப்பாளர்; தங்கை திருமணச் செலவுக்குத் திருடியது அம்பலம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (73). மூதாட்டியான இவர் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது முகத்தில் துணி கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் வீட்ட... மேலும் பார்க்க