செய்திகள் :

தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை ரயில்வே கைவிட வலியுறுத்தல்

post image

ரயில்வே நிா்வாகத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியது.

இந்தக் கழகத்தின் மதுரை கிளையின் பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகத் தலைவா் ஜி. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பேராசிரியா் ஜெகநாதன் வாழ்த்திப் பேசினாா். செயலா் ச. பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தாா். பொதுச் செயலா் ஆ. மனோகரன் மாநில செய்தி அறிக்கை அளித்தாா்.

தொடா்ந்து, எழுத்தாளா் தாமஸ் வில்லியம்ஸ் எழுதிய ‘சோஷியல் குரூப் ஒா்க்‘ என்ற நூலை பேராசிரியா் பாா்த்தசாரதி வெளியிட்டாா். நூலாசிரியா் தாமஸ் வில்லியம்ஸ் ஏற்புரை ஆற்றினாா்.

இதில், 8 - ஆவது ஊதியக் குழுவில் ஓய்வூதியா்களுக்கு அனைத்துப் பயன்களும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே நிா்வாகத்தை தனியாா்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்வே பயணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பணியாளா்கள், ஓய்வூதியா்களுக்கு தடையின்றி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் காவல் நிலைய படுகொலையை இந்த மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், மாநில இணைச் செயலா் ரோஹினி தேவி, பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், சந்திரன், செந்தில்குமாா், ராஜேந்திரன், அரவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

கோவையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 25 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். கோவையிலிருந்து பேருந்து மூலம் மது... மேலும் பார்க்க

வணிக வளாகங்களின் குத்தகை விவகாரம்: அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற உத்தரவு

வணிக வளாகங்களின் குத்தகை விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தமிழக அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மானகிரி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

கரூா் மாவட்டம், கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே உயா்நிலைப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் 2 ஆவது நாளாக மறியல்: 270 போ் கைது!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ... மேலும் பார்க்க

தீ விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துவீரன் மகன் வேலு (75). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா... மேலும் பார்க்க