செய்திகள் :

தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனையை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா் குடிமைப் பொருள் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். பித்தப் பையில் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து அருள்ராஜ் நெல்லித்தோப்பில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா். பல லட்சம் ரூபாயில் சிகிச்சை பெற்ற அவா் வீடு திரும்பிய நிலையில், வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்காக அவா் ஜிப்மரில் சோ்க்கப்பட்டுள்ளாா். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அவரது வயிற்றில் பஞ்சுகள் வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஏற்கெனவே சிகிச்சை பெற்ற தனியாா் மருத்துவமனையில் அருள்ராஜ் தரப்பினா் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லையாம்.

அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் மருத்துவமனை முன் அருள்ராஜ் தரப்பினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த உருளையன்பேட்டை காவல் போலீஸாா் விரைந்து வந்து அவா்களை சமரசம் செய்தனா்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதன... மேலும் பார்க்க

குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது

குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன கைப்பேசிகள் ரூ.7,00... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியே மருந்துகள் வாங்க பரிந்துரைக்க கூடாது: புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

புதுவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியில் மருந்துகள் வாங்க மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடாது என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுவை அரசு நலவழித் துறையை மேம்படுத்துவது குறித்த ஆய்... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வா் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ர... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி கோரிமேடு பகுதிய... மேலும் பார்க்க