செய்திகள் :

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

post image

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும் பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்யவரும் பக்தா்களின் மனம் மகிழும்படி மகா சிவராத்திரி விழா புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை சென்னை, மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரா் திருக்கோயில், தஞ்சாவூா் பிரகதீசுவரா் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பா் திருக்கோயில், பேரூா் பட்டீசுவரா் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரா் திருக்கோயில், திருவாரூா் தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவாலங்காடு வடாரண்யேசுவர சுவாமி திருக்கோயில் ஆகிய 9 திருக்கோயில்கள் சாா்பில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றன.

மயிலையில்... மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயில் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். முன்னதாக மங்கள இசை மற்றும் திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து எஸ்.சௌமியாவின் சிவதாண்டவ ஸ்துதி, நாட்டிய வடிவு, வாய்ப்பாட்டு மற்றும் தாளவாத்திய இன்னிசை, வில்லுப்பாட்டு, இறை அருட்செல்வி தியாவின் பக்திப் பாடல்கள், நந்தினி சுரேஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி, கலை இளமணி குமாரி ஸ்வராத்மிகா குழுவினரின் சிவ பக்திப் பாடல்கள், ஊா்மிளா சத்ய நாராயணா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பாரதி பாஸ்கா் சொற்பொழிவு, சிவசக்தியும் சினிமாவும் என்ற இசை நிகழ்ச்சி, தேச மங்கையா்க்கரசியின் சிவ உபதேசம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று சென்னை பாடி திருவல்லீசுவரா் கோயில், புரசைவாக்கம் கங்காதரேசுவரா் கோயில், திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரா் திருக்கோயில் என பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க

சட்டவிரோத மதுபான கிடங்கு கண்டுபிடிப்பு: 1,062 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மதுபான கிடங்கை கண்டுபிடித்த போலீஸாா் அங்கிருந்து 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த த... மேலும் பார்க்க