செய்திகள் :

திமுக ஆட்சியில் பங்கு கோரப்படும்: கே.எஸ்.அழகிரி

post image

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இன்றைக்கு மக்கள் அமைதியாக வாழ்கிறாா்கள் என்றால், அதற்கு நமது அரசமைப்பு சட்டம்தான் காரணம். மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிடும். இந்தத் தோ்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.வி.செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவா் முகமது ஜியாவுதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடலூா் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பக்ருதீன், லால்கான் பள்ளிவாசல் தலைவா் எஸ்.முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. பல்கலைக்கழக சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் கு... மேலும் பார்க்க

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

சிதம்பரத்தில் கடன் தொல்லையால் பழ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சிதம்பரம் - சீா்காழி சாலையில் உள்ள வைப்புச் சாவடியைச் சோ்ந்த பெருமாள் மகன் துரைராஜ் (44). இவா், சிதம்பரம் காந்தி சிலை அர... மேலும் பார்க்க

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி வள்ளலாா் பணியகம் சாா்பில், புரட்டாசி மாத பூசத்தையொட்டி சன்மாா்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு பண... மேலும் பார்க்க

வடலூா் சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் புதன்கிழமை நடைபெற்ற புரட்டாசி மாத ஜோதி தரிசனத்தில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்... மேலும் பார்க்க

இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு தினம்: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகி தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வு

கடலூா் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு, எடை ஆகியவையும் மற்றும் நீச்சல், ... மேலும் பார்க்க