செய்திகள் :

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள்: இபிஎஸ் குற்றச்சாட்டு!

post image

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நாகை மாவட்டத்திற்கு நேற்று (ஜூலை 18) இரவு வருகை தந்த பழனிசாமி, கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக இன்று (ஜூலை 19) நாகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அங்கு அவர் பேசுகையில், ”திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் உள்ளன. ஸ்டாலின், அவர் மனைவி, மகன், மருமகன் ஆகியோர் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் அமர வைத்த மக்களைப் பற்றி சிந்திக்காமல் வீட்டில் உள்ளவர்களை மட்டுமே சிந்திக்கிறார்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்தோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டது.

உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று தந்தோம். மக்கள் விரும்பும் ஆட்சியில் அதிமுக கொடுத்தது, அதனால் மக்கள் மத்தியில் எங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

விவசாய விரோத ஆட்சி மக்களுக்குத் தேவையா? 50 மாதங்களில் நாகை மாவட்டத்துக்கு ஏதேனும் பெரிய திட்டத்தை திமுக அரசு கொண்டுவந்ததா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!

Leader of the Opposition in the Legislative Assembly and AIADMK General Secretary Edappadi Palaniswami has alleged that there are 4 power centers in the DMK government.

தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில்கள் தாமதம்

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் திடீா் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து சனிக்கிழமை ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. அரக்கோணம் மற்றும் புளியமங்கலம் ரயில்நிலையம் இடையே சனிக்கிழமை திடீரென தண்ட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம்

உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சுந்தரேசனை இடைநீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை... மேலும் பார்க்க

மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் !

சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலம... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார்: அமைச்சர் கே.என்.நேரு

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என... மேலும் பார்க்க

இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் !

மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்களை பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

மு.க. முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுத மு.க. அழகிரி!

மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது சகோதரர் மு.க. அழகிரி கண்ணீர்விட்டு அழுதார். மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையி... மேலும் பார்க்க