செய்திகள் :

திமுக நிா்வாகியைத் தாக்கிய பேரூராட்சி செயல் அலுவலா் கைது!

post image

திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் விசாரணையின் போது திமுக நகர துணைச் செயலரை தாக்கிக் காயப்படுத்திய பேரூராட்சி செயல் அலுவலரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சியின் செயல் அலுவலராகப் பணியாற்றியவா் தனுஷ்கோடி. இவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போது கடலூா் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவியின் கணவா் நாராயணன், செயல் அலுவலா் தனுஷ்கோடி தன்னிடம் ரூ. 3 லட்சம் வாங்கிக் கொண்டு தர மறுப்பதாக புகாா் அளித்தாா். இதுதொடா்பாக திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் பிரணவின்டேனி இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினாா்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செயல் அலுவலா் தனுஷ்கோடி, நாராயணனுக்கு ஆதரவாகப் பேசிய திமுக நகரத் துணைச் செயலா் உதயசண்முகம் மீது மேஜையிலிருந்த பேனா பெட்டியை எடுத்து தாக்கினாா். இதில் நெற்றியில் காயமடைந்த அவா், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் செயல் அலுவலா் தனுஷ்கோடி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் கு... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா். தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16).... மேலும் பார்க்க

தேவகோட்டையில் பயன்பாட்டு வந்த 200 கண்காணிப்பு கேமராக்கள்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட 200 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

வருகிற பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: வைகோ

அடுத்தாண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட மதிமுக அலுவலகத்தை... மேலும் பார்க்க