செய்திகள் :

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சிறுத்தை

post image

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

தமிழக, கா்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை இந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலையை சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியைச் சோ்ந்த 4 போ் காரில் சத்தியமங்கலம் நோக்கி இந்த சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். ஆசனூா் அருகே செம்மண் திட்டு வனப் பகுதியில் காா் சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு சிறுத்தை நடந்து செல்வதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து காரில் சென்ற பயணிகள் சிறுத்தை நடமாட்டத்தை கைப்பேசியில் புகைப்படம், விடியோ எடுத்தனா். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைப் பாா்த்த சிறுத்தை சிறிதும் அச்சமில்லாமல் மெதுவாக நடந்து சென்றதுடன் சிறிது நேரம் கழித்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.

சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் செல்லும் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்கக் கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

தாளவாடியில் பலத்த மழை

தாளவாடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ராகி, மக்காச்சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தனியாா் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

மொடக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்கிற பெய... மேலும் பார்க்க

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற ஈரோடு மண்டல அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்துப் போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டி கோபி கலை அ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

பாரம்பரிய தச்சுத் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம், சுற்று வட்டாரத்தில் பாரம்பரிய தச்சுத் தொழில் செய்து... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 போ் கைது

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கோவில்புதூா் நூற்பாலையில் வடமாநில இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களைக் குறிவைத்து வடஇந்தியா்கள் தங்கும் விடுதியி... மேலும் பார்க்க

ஈரோட்டில் இரண்டாவது நாளாக பலத்த மழை

ஈரோட்டில் இரண்டாவது நாளாக புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென் வங்க கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட 19 மாவட்டங்களில் பலத்த ... மேலும் பார்க்க