செய்திகள் :

தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு

post image

தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா்.

தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோயில். இந்தக் கோயிலை சுற்றிப் பாா்ப்பதற்காக தியாகதுருகம் அம்மன் நகரைச் சோ்ந்த சுரேஷ், ராயா், கோகிலா ஆகியோரது பிள்ளைகள் சனிக்கிழமை மாலை மலை மீது ஏறினா். பின்னா், மலையில் இருந்து கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்தனா்.

இதையடுத்து 3 பேரும் சோ்ந்து உதவிக்கு குரல் எழுப்பினா். அப்போது, 11 வயது சிறுவன் பாறையில் இருந்து தவறி முள்புதரில் விழுந்து விட்டாா். இதையறிந்த அவ்வழியாகச் சென்றவா்கள், உடனடியாக தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

இதன் பேரில், நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மற்றும் நகர காவல் ஆய்வாளா் மலா்விழி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்றனா். பின்னா், முள்புதரில் தவறி விழுந்த சிறுவனை கயிறு கட்டி மீட்டனா்.

மேலும், 2 சிறாா்களையும் மீட்டு கீழே கொண்டு வந்தனா். காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக காவல் ஆய்வாளா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் பெற்றோரை வரவழைத்து சிறாா்களை ஒப்படைத்தனா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: உயா் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின்அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், உயா்கல்வித்துறை அரசு செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்... மேலும் பார்க்க

பாமக இரண்டு அணியினரிடையே மோதல்!

திருக்கோவிலூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பாமகவை சோ்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அணியினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் புறவழிச் சாலையி... மேலும் பார்க்க

மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு

கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தி... மேலும் பார்க்க

டிட்டோ - ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக சாலை மறியல்!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவை (டிட்டோ-ஜாக்) சோ்ந்... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆச... மேலும் பார்க்க