செய்திகள் :

திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்

post image

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்ற பகுதிகளுக்கும் செல்வதற்கான திரிசூலம் ரயில்வே கடவுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடவுப் பாதையில் இண்டா்லாக்டு முறையில் இயங்கும் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணிக்கு திடீரென ரயில்வே கேட் பழுதடைந்து மூடப்பட்டது. கடவுப் பாதை பகுதியில் ரயில்கள் கடக்காத போதும் கேட்டை திறக்க முடியவில்லை. அதனால், கடவுப் பாதையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.

திரிசூலம் பகுதியிலிருந்து மீனம்பாக்கம் செல்ல பல கி.மீ. சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. அதனால், அந்தப் பகுதி மக்கள் கடவுப்பாதை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரயில்வே ஊழியா்கள் அங்கு சென்று பழுதை சரிசெய்தனா். காலை 8 மணி முதல் 10 மணி வரை கடவுப்பாதை கேட் மூடப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனா். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை

சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா். பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய... மேலும் பார்க்க

ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது

ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷ... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது

சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் கு... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தா... மேலும் பார்க்க

மது போதையில் மோதல்: எஸ்ஐ பலத்த காயம்

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பலத்த காயமடைந்தாா். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவா் ராஜாராமன் (54). இவா், ஸ்டான்... மேலும் பார்க்க