செய்திகள் :

திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு - கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ செவிலியர் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதால் அதற்கு சிகிச்சை பெற திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினர். இதனை அடுத்து, அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சைக்கு பின்பு அவர் உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்களும், சக மாணவிகளும் அதிர்ச்சியடைந்தனர். 'மருத்துவரின் தவறான சிகிச்சையும், மயக்க மருந்து அதிக அளவு வழங்கப்பட்டதால் தான் சீதாலட்சுமி உயிரிழந்ததாக' குற்றம்சாட்டி அவரது பெற்றோர்கள் மற்றும் சக செவிலியர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அரசு மருத்துவமனை முன்பு சுமார் மூன்று மணி நேரம் அவர்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும், உயிரிழந்த மாணவியின் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். சிகிச்சை அளித்ததன் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனை வளாகம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

minister ramesh

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்,

"அறுவை சிகிச்சை மேற்கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு கல்லூரியில் எந்தவித பிரச்னையும் ஏற்படுத்தக் கூடாது என அவர்கள் நிர்வாகத்திடம் பேசி உள்ளோம். அப்படி ஏற்பட்டால் அவர்களை என்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நிச்சயம் செய்வோம்" என தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க