செய்திகள் :

திருச்சி சிறையில் விசாரணைக் கைதி மர்ம மரணம்; மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அவர் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால் மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் மகன் சுபின்குமார் (வயது 19) கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி பெரம்பலூர் காவல்துறையினர் அவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததால் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டார்.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வலிப்பு நோயால் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். என் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு, அவனுக்கு ஒருபோதும் வலிப்பு நோய் வந்ததில்லை. சிறை அதிகாரிகள் கூறுவது முற்றிலும் தவறானது, சந்தேகத்திற்கு உரியது.

சிறைக் கைதி மர்ம மரணம்
சிறைக் கைதி மர்ம மரணம்

என் மகன் காவல்துறை விசாரணையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம், அல்லது சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மரணம் அடைந்திருக்கலாம். அதனால் வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மறு உடற்கூராய்பு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், "திருச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்து, கபின்குமாரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று, இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்த உத்தரவின் மூலம் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியின் திடீர் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க