செய்திகள் :

திருச்சி சிறையில் விசாரணைக் கைதி மர்ம மரணம்; மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அவர் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால் மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் மகன் சுபின்குமார் (வயது 19) கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி பெரம்பலூர் காவல்துறையினர் அவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததால் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டார்.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வலிப்பு நோயால் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். என் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு, அவனுக்கு ஒருபோதும் வலிப்பு நோய் வந்ததில்லை. சிறை அதிகாரிகள் கூறுவது முற்றிலும் தவறானது, சந்தேகத்திற்கு உரியது.

சிறைக் கைதி மர்ம மரணம்
சிறைக் கைதி மர்ம மரணம்

என் மகன் காவல்துறை விசாரணையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம், அல்லது சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மரணம் அடைந்திருக்கலாம். அதனால் வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மறு உடற்கூராய்பு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், "திருச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்து, கபின்குமாரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று, இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்த உத்தரவின் மூலம் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியின் திடீர் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் எ... மேலும் பார்க்க

பீகார்: பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு, கார் ஏற்றி படுகொலை - என்ன நடந்தது?

பீஹாரில் வரும் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்ந்து நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராஷ்... மேலும் பார்க்க

பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவத... மேலும் பார்க்க

கரூர்: 3D கேமரா, சாலையை அளக்கும் பணி! - இரண்டாவது நாளாக CBI அதிகாரிகள் விசாரணை!

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41... மேலும் பார்க்க

திருச்சி: இன்டர்வியூ-க்கு சென்ற இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் (வயது: 22). கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தே... மேலும் பார்க்க

புனே: "ரூ.10,000-க்கு 10 ஆண்டு கொத்தடிமைகளாக இருந்தோம்" - கரும்பு வெட்டும் 27 தொழிலாளர்கள் மீட்பு

மகாராஷ்டிராவில் புனே, சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளர்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.அது போன்று புனே அரு... மேலும் பார்க்க