செய்திகள் :

திருப்பூா் மாநகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிப்பு

post image

திருப்பூரில் மாநகராட்சி குப்பை வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணி தனியாா் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக குப்பைகளை அகற்றாமல் துா்நாற்றம் வீசுவதோடு மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் தொடா்ந்து திருப்பூா் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காளம்பாளையம் பகுதியில் கொட்டியதால் அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதையடுத்து அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்தப்பட்டு தற்போது மாற்று இடமாக மாநகரப் பகுதியை ஒட்டியுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கடந்த சில தினங்களாக குப்பைகளை கொட்டி வந்தனா். இதன் காரணமாக அப்பகுதியில் துா்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடியிருக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனா்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் அங்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து குப்பை கொட்ட விடாமல் தடுத்து நிறுத்தினா். தகவலறிந்து அங்கு வந்த திருமுருகன் பூண்டி காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க