செய்திகள் :

``திருமணம் மீறிய உறவில் மனைவி'' - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவருக்கும், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (32) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 வயதான கயல்விழி என்ற மகளும், 7 வயதான நிதர்சன் என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார் கிருஷ்ணன். அங்கு வேலை செய்தபடியே, பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருந்தார்.

2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி
கிருஷ்ணன், கயல்விழி, நிதர்சன்

இதனிடையே, பூங்கொடிக்கு வேறு ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பு ஏற்பட்டது. இது தெரியவந்ததும் மனவேதனைக்குள்ளான கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். பிள்ளைகளையும் தனது அரவணைப்பிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊரான தெள்ளூர் கிராமத்துக்கு பிள்ளைகளை அழைத்துவந்தார் கிருஷ்ணன். பண்டிகை முடிந்து ஒரு வாரமாகியும் சென்னைக்கு திரும்பாமல் இருந்தார்.

இதையடுத்து, இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததை கவனித்த அக்கம் பக்கத்து உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது, கிருஷ்ணன் தூக்கில் சடலமாகவும், அவரது இரு பிள்ளைகளும் தரையில் சடலமாகவும் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சேத்துப்பட்டு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மூன்று உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தாயின் ஏக்கத்தில் இருந்த பிள்ளைகளுக்காக மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியிருந்தார் கிருஷ்ணன். ஆனால், மனைவி பூங்கொடி தனது காதலன் மீதான ஆசையால் பிள்ளைகளையும் பார்க்க விரும்பாமல், கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட துயர்மிகுதியால், தூங்கிக்கொண்டிருந்த இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கிருஷ்ணன் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம்

சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கிருஷ்ணன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். அதில், ``என் சொத்து, நகை எல்லாம் வாங்கிக்கொண்டு ஏமாற்றினாள். குழந்தைகள் மேல் கொஞ்சம்கூட பாசம் இல்லை. அவளிடம் விட்டுச்சென்றால், ஆகாரம் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகள் இறப்பதைவிட என்னிடம் இறப்பது நல்லது. அவளின் குடும்பம் சரி இல்லை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கடிதத்தை வைத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க