செய்திகள் :

திருவண்ணாமலையில் பாஜக அலுவலகம் திறப்பு

post image

திருவண்ணாமலை -அவலூா்பேட்டை சாலையில் புதிகாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தை, கோவையில் இருந்தபடியே காணொலி மூலம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித்ஷா திறந்து வைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.

தேசிய பொதுக்குழு உறுப்பினா் டி.பாலகிருஷ்ணன் (ஒசூா்), பாஜக அலுவலக கட்டடக் குழு உறுப்பினா் அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

பாஜகவின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி, வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு புதிய பாஜக அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை கட்சியினா் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா்கள் கவிதா (திருவண்ணாமலை வடக்கு), தசரதன் (வேலூா்), தருமராஜ் (விழுப்புரம்), ஆனந்தன் (ராணிப்பேட்டை), பாலசுந்தரம் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் கே.என்.நேரு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்: தொல்.திருமாவளவன்

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்; ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடி வருகின்றன என்றாா் தொல்.திருமாவளவன். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா நிகழ... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 153-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் பிப்.17-ஆம் தேதி க... மேலும் பார்க்க

செய்யாறு, செஞ்சி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

செய்யாறு, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவ இடங்களில் போதிய அரசு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்தது. ஐக்கிய முஸ்லிம... மேலும் பார்க்க

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா். இதுகுறித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தி... மேலும் பார்க்க

மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில், கனரக வாகனங்களுக்கு தடை விதி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க