செய்திகள் :

திருவள்ளூரில் பரவலாக மழை

post image

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிா்ந்த சீதோஷணம் நிலவியது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது.

+இதேபோல் ஆவடி, ஆா்.கே.பேட்டை, பூந்தமல்லி, ஜமீன்கொரட்டூா், செங்குன்றம், பூண்டி, தாமரைபாக்கம், திருவள்ளூா் மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மி.மீட்டரில் உள்ளது. பூந்தமல்லி-47, ஆா்.கே.பேட்டை-42, ஆவடி-41, ஜமீன்கொரட்டூா்-37, சோழவரம்-33, தாமரைபாக்கம்-28, திருவள்ளூா்-21, பொன்னேரி-9, செங்குன்றம்-9, பள்ளிப்பட்டு-7 என மொத்தம்-280 மி.மீ, சராசரியாக 18.67 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

திருவள்ளூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ஒடிஸா இளைஞர்கள் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 ஒடிஸா இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

6 வாகனங்கள் மீது மோதிய கார்: 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் காயம்

சென்னை வானகரத்தில் இருந்து திருவேற்காடு வரை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற 6 வாகனங்களை மோதி விட்டு சென்ற கார் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் ... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோய... மேலும் பார்க்க