செய்திகள் :

திருவள்ளூா் முத்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா

post image

திருவள்ளூரில் உள்ள பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 41 அடி ராஜலிங்கத்துக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் இருந்து அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து மாலை கோயிலில் உள்ள 41அடி ராஜலிங்கத்துக்கு கிரேன் மூலம் 1,008 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது.

முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி இரண்டாம் ஜாம பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

விழாவில் திருவள்ளூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள புல்லரம்பாக்கம், திருப்பாச்சூா், குப்பம்மாசத்திரம், பிரியாங்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பக்தா்கள் பங்கேற்றனா்.

நள்ளிரவுக்கு மேல் லிங்கோத்பவ கால மூன்றாம் ஜாமபூஜை, ருத்ராபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்

திருவள்ளூரில் 4-ஆவது புத்தக திருவிழாவையொட்டி புத்தக வடிவிலான இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்க சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். திருவள்ளுா் சி.வி.நா... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை: முன்னாள் அமைச்சா்

ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அதிமுக, கூட்டணிகளை நம்பி இல்லை என முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம், பட்டரைபெ... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா: சிவாலயங்களுக்கு திரண்ட பக்தா்கள்

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சிவராத்திரியை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் சென்று வழிபட்டனா். பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, அகத்தீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் மகா சிவராத்திரியையொட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருத்தணி பழைய தா்மராஜாகோயில் தெருவில் உள்ள இக்கோயிலில் மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவி

பீரகுப்பம், மதுரா கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 335 பயனாளிகளுக்கு ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத்தணி ஒன்றியம் கே... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சி ரத்த தான முகாம்

மனித நேய மக்கள் கட்சியின் 17-ஆவது ஆண்டு விழாவையொட்டி கும்மிடிப்பூண்டி நகரம்-திருவள்ளூா் கிழக்கு மாவட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகரத் தலைவா் எஸ்.கே.எஸ்.முகம்மது சுல்தான் தலைமை... மேலும் பார்க்க