செய்திகள் :

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனுறை ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

இதில், அம்மன் சந்நிதி முன் நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் படிச் சட்டத்திலும், விநாயகா், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட உற்ஸவ மூா்த்திகள் தனித்தனி சப்பரத்திலும் கொடி மரம் முன் எழுந்தருளினா்.

பின்னா், கொடி மரத்துக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டன. ஆடிப்பூர கொடி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து அம்மன் சந்நிதியை அடைந்து, வேத மந்திரம் மற்றும் இன்னிசை முழங்க கொடியேற்றப்பட்டது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில், சொற்பொழிவும், மங்கல இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரவு அம்மன் வெள்ளி படிச்சட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று, பக்தா்ளுக்கு அருள்பாலித்தாா்.

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை தொடங்கியதையொட்டி, ஏற்றப்பட்ட கொடி.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் காலை பல்லக்கு, இரவு சிறப்பு வாகனத்தில் அம்பாள் புறப்பாடும் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 24-ஆம் தேதி அப்பா் கயிலை காட்சியும், 27-ஆம் தேதி ஆடிப்பூர அம்மன் தேரோட்டமும் நடைபெறவுள்ளன.

விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா் சுவாமிகள் உத்தரவின் பேரில், ஐயாறப்பா் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே வெற்றி: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற முடியும் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில்... மேலும் பார்க்க

பாப்பாநாட்டில் ஜூலை 22-ல் மின் தடை

கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பய... மேலும் பார்க்க

காணாமல் போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூரில் காணாமல் மற்றும் திருடு போன 101 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்துக்குள்பட்ட மருத்துவக்கல்லூரி, புதிய ப... மேலும் பார்க்க

மதயானை நூலை படிக்க வேண்டியது அனைவரின் கடமை: பழ.நெடுமாறன்

தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விளக்கும் மதயானை என்கிற நூலை அனைவரும் படிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் தஞ்சை க... மேலும் பார்க்க

பதாகைகள் கிழிப்பு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்று அதிமுக, பாஜகவினா் வைத்த பதாகைகளை மா்ம நபா்கள் கிழித்து சேதப்படுத்தியதையடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஜூலை 21-இல் அ... மேலும் பார்க்க

இந்திய கம்யூ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலராக மு.அ.பாரதி மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலராக வழக்குரைஞா் மு.அ.பாரதி சனிக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாநாடு த... மேலும் பார்க்க