செய்திகள் :

தூத்துக்குடி: போலி 500 ரூபாய் நோட்டை திருடி சில்லரை மாற்றியவர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று இரவு எட்டயபுரம், கான்சாபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரூ.500 கொடுத்து சில்லரை மாற்றிக்கொண்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில், அவர் கொடுத்த ரூ.500 நோட்டு போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர்

அப்போது, அவர் அந்த 500 ரூபாய் நோட்டை தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு சமையல் மாஸ்டரான அசாம் மாநிலம் தேஸ்பூரைச் சேர்ந்த குமார் சர்மாவின் பர்சில் இருந்து திருடியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, குமார் சர்மாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர், “5 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ‘ரூ.1 லட்சம் நல்ல நோட்டுகளை கொடுத்தால், இரட்டிப்பாக ரூ.2 லட்சம் வழங்குகிறோம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்து, அந்த விளம்பரத்தை கொடுத்த நபர்களை தொடர்பு கொண்டேன்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் மும்பை சென்று, அவர்களிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்து, ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகளை பெற்றுக்கொண்டு எட்டயபுரம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

இங்கு வந்து பார்த்தபோது, அதில் ரூ.2 ஆயிரத்திற்கு மட்டும் நான்கு 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததையும், மற்றவை குழந்தைகள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டுகளாகவும், வெள்ளை பேப்பர்களை கட்டுகளாக வைத்து ஏமாற்றியுள்ளனர்.

எட்டயபுரம் காவல் நிலையம்
எட்டயபுரம் காவல் நிலையம்

இதனால் அந்த போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் பையில் வைத்திருந்தேன். ஆனால், சரவணன் எனக்குத் தெரியாமல் அதை திருடி, கடையில் கொடுத்து சில்லரை மாற்றியுள்ளார் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரிடமிருந்த 67 போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், மும்பையை சேர்ந்த மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

``25 பேர் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்; எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' - கதறி அழுத பெற்றோர்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அ... மேலும் பார்க்க

பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய கொடூரன்; போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்த காவல்துறை

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 22 வயதான பிரவீன். கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்த இவன் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் ... மேலும் பார்க்க

பிரபல பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் - சிவகாசியில் 3 பேர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் சான்றிதழை வழங்கி, அம்மாநில இளைஞர் ஒருவர் அரசுப் பணிக்குச் சேர்ந்துள்ளார்.அந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது அது போலியானது என தெரிய... மேலும் பார்க்க

`அரசுப்பள்ளி மாணவர்கள் மோதல்'- தலையில் தாக்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவன் மூளைச்சாவு அடைந்த சோகம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கும்பகோணம், பட்டீஸ்வரம், உடையாளூர், பம்பப்படையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராங்களைச் சேர... மேலும் பார்க்க

”திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் வீட்டில் கொள்ளை”- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன். இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக-வில் விவசாய அணியின் மாநில செயலாளராகவும் பதவி வகிக்கிறார். தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராகவும் ... மேலும் பார்க்க

5 வயது சிறுவனை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை - வால்பாறையில் சோகம்

கோவை மாவட்டத்தில் மனித–வனவிலங்கு மோதல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதிலும் வால்பாறை மலைப் பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிக... மேலும் பார்க்க