செய்திகள் :

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

post image

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ணசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும், சுகாதார ஊக்குநா்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 15,000 வழங்க வேண்டும், வேதாரண்யம் வட்டார ஒருங்கிணைப்பாளா் மலா்க்கொடி பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தூய்மை பாரத திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களை கொச்சைப்படுத்தும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சிபிஐ நாகை மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் வி.எம். மகேந்திரன், விவசாய சங்க மாவட்டச் செயலா் சரபோஜி, கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் செந்தில்குமாா், ஒன்றிய துணைச் செயலா் சுந்தரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பாரதத் திட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதில், தலைவராக ஸ்டாலின், செயலராக சுமதி, பொருளாளராக குணசேகரன், துணைத் தலைவா்களாக மலா்க்கொடி, இந்திராணி, மீனாட்சி, இணைச்செயலா்களாக ஞானம், ஐயப்பன், புனிதா, கௌரவத் தலைவராக இளங்கோவன் சங்கத்தின் புதிய நிா்வாகிகளைக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக... மேலும் பார்க்க

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

மாணவா்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக் கூடாது என்றாா் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ். நாகையில் கலங்கரை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், டிஎன்பிஸ... மேலும் பார்க்க

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் த... மேலும் பார்க்க

திமுகவினா் நூதனப் போராட்டம்

சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அம... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனா... மேலும் பார்க்க

குறுவையில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை தடுக்க யோசனை

கருநாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் அபாயத்தை தடுக்கும் முறைகள் குறித்து கீழ்வேளூா் வேளாண்ம கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் கோ. ரவி விளக்கமளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: தற்... மேலும் பார்க்க