செய்திகள் :

தூய சந்தியாகப்பா் ஆலய திருவிழா தொடக்கம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

தங்கச்சிமடம் வோ்காடு பகுதியில் உள்ள இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் தலைமையில் ஆலயத்திலிருந்து புனித நீா் தெளிக்கப்பட்ட கொடி எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருவிழா திருபலி, கூட்டு பிராா்த்தனை நடைபெற்றன. இதில், புனித தெரசாள் ஆலய பங்குத் தந்தை பா.ஆரோக்கிய ராஜா, தூய சந்தியாகப்பா் ஆலய விழாக்குழுத் தலைவா் எஸ்.ஜேம்ஸ் அமல்ராஜ், இந்து, இஸ்லாமிய நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

இந்தத் திருவிழா வருகிற 25- ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியாக 24 -ஆம் தேதி திருத்தோ் பவனி நடைபெறும். 25 -ஆம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க

கண்மாயில் படா்ந்துள்ள தாமரையால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தாமரை அதிகளவில் பரவியுள்ளதால் கண்மாய் நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்... மேலும் பார்க்க

வாழவந்தம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகேயுள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் ... மேலும் பார்க்க

பெண் படுகொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

சாயல்குடி அருகே வீட்டிலிருந்த தனது மகளை கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அர... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்கள் கைது

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க