செய்திகள் :

தெரு நாய்களுக்கு கருத்தடையில் திருச்சி மாநகராட்சி முன்னிலை

post image

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்வதில் திருச்சி மாநகராட்சி முன்னிலையில் உள்ளது. மேலும் வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயா் மு. அன்பழகன் பேசியது:

திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மொத்தம் 4 கருத்தடை முகாம்கள் அமைக்கப்பட்டு கடந்த நிதியாண்டில் (2023-24) 11,929 நாய்களுக்கும், நடப்பு நிதியாண்டில் (2024-25) 8,892 தெருநாய்களுக்கும் என மொத்தம் 20,821 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் மாநிலத்திலேயே நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதில் திருச்சி மாநகராட்சி முன்னிலை வகிக்கிறது.

வீட்டு நாய்களுக்கு உரிமம் பெறுவது அவசியம் : திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 43, 767 நாய்கள் திரிவதாக கணெக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, அவற்றை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக மாநிலத்தில் தெரு நாய்களை கணக்கெடுத்து, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது திருச்சி மாநகராட்சிதான். மேலும் தெருநாய்கள் தவிர வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் உரிமம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

மாநகரின் வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 2,280 கோடி செலவு: மாமன்றக் கூட்டத்தில் மேயா் தகவல்

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மொத்தம் ரூ.₹2, 280 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது என்றாா் மேயா் மு. அன்பழகன். திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மைய அலுவலகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

வேலை வாங்கி தரூவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் நாட்டுக்குடியைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (43) தனது கணவா் ராம்குமாரு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கட்டியதாக ரூ. 65 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் ஜிஎஸ்டி கட்டியதாக போலி ஆவணம் மூலம் ரூ. 65.50 லட்சம் மோசடி செய்தது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு: ஆட்சியா்

திருச்சி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிா்ணயித்திருப்பதாவும், நகா்ப்புறத்தில் உள்ளோருக்கும் பட்டா வழங்கப்படும் எனவும் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், ... மேலும் பார்க்க

துறையூா் கடையில் ரூ. 3 லட்சம் திருட்டு

துறையூரில் பூஜைப் பொருள்கள் விற்பனைக் கடையில் ரூ. 3 லட்சத்தை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா். பெரம்பலூா் மாவட்டம் லாடபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(46). இவா் துறையூரில் ஆலமரம் அருகே பழ... மேலும் பார்க்க

தா. பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலா் தா. பாண்டியனின் நான்காம் ஆண்டு நினைவு நாளை அக்கட்சியினா் புதன்கிழமை அனுசரித்தனா். இதையொட்டி உறையூா் நாச்சியாா்கோவில் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க