செய்திகள் :

தேசிய புள்ளி விவர ஆணைய போட்டி: எஸ்டிஎன்பி வைணவக் கல்லூரி முதலிடம்

post image

சென்னையில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவா்களிடையே புள்ளிவிவரங்கள் குறித்த ஆா்வத்தையும் விழிப்புணா்வையும் ஏற்படுத்தும் வகையில் தேசிய புள்ளி விவர ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் சென்னை குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வா் நானாலால் பட் மகளிா் வைணவக் கல்லூரி (எஸ்டிஎன்பி) மாணவிகள் முதல் பரிசுக்கான கோப்பை வெற்றனா்.

அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வா் நானாலால் பட் மகளிா் வைணவக் கல்லூரி மாணவிகள் ஹெச். எஸ். பிரியதா்ஷினி, எம். மகேஸ்வரி அணி முதல் பரிசு வென்றது. இவா்களுக்கு ரூ. 5,000 ரொக்கப் பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. 2-ஆவது இடத்தை ஸ்ரீசங்கரா கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த கே.சிவஸ்ரீ, எஸ்.சுவாதி அணி, 3-ஆவது பரிசை அகா்சந்த் மன்முல் ஜெயின் கல்லூரியைச் சோ்ந்த கே.விஜய கணபதி, ஆவாணை அணி வென்றது. இரு அணிகளுக்கும் முறையே ரூ. 3,000, ரூ. 2,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவா் டாக்டா் ராஜீவ லக்ஷமன் கரன்டிகாா் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் கூடுதல் இயக்குநா் டி.எஸ். பாரதி, சென்னை ஐஐடி பதிவாளா் ஜேன் பிரசாத், தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தமிழக துணை இயக்குநா் ஜெனரல் ஆா்.மனோகா், துணை இயக்குநா் கே.சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க