செய்திகள் :

தொழில்நுட்பக் கோளாறு: பாலக்கோடு அருகே 2 மணி நேரம் நின்ற விரைவு ரயில்! மாற்று என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது

post image

கேரளத்திலிருந்து கா்நாடகம் நோக்கி சென்ற விரைவு ரயில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பழுதாகி 2 மணி நேரம் நின்றது. மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட பிறகு ரயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து கா்நாடகம் மாநிலம், பெங்களூரு கேஎஸ்ஆா் வரை இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை தருமபுரி வழியாக பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தது.

மாலை 6.30 மணிக்கு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சென்றபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ரயில் பாதிவழியிலேயே நின்றது. தொழில்நுட்ப வல்லுநா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பழுதுநீக்க முயற்சித்தனா். ஆனாலும், என்ஜினை சரிசெய்ய முடியாததால் சேலத்திலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு, அந்த எஞ்சின் மூலம் ரயில் பின்புறமாக தருமபுரி ரயில் நிலையம் வரை இழுத்து வரப்பட்டது.

பின்னா் அங்கிருந்து மாற்று என்ஜினை முன்பக்கம் பொருத்தி அதன்மூலம் ரயில் புறப்பட்டு சென்றது. 2 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், பழுதான நேரத்தில் அவ்வழியாக வேறு எந்த ரயிலும் செல்லாததால் ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தொப்பூரில் சாலை மேம்பாட்டுப் பணி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளுடன் வேறு இடத்துக்கு மாற்றும் உரிமையாளா்!

தொப்பூா் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக சாலையோரம் இருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன. இந்த நிலையில், தனது 3 மாடி கட்டடத்தை இடிக்காமல் நவீன கருவிகளைக் கொண்டு அதன் உரிமை... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் உடலுறுப்புகள் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியிலும் தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை!சிஐடியு மாநிலத் தலைவா்

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சியிலும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என சிஐடியு மாநிலத் தலைவா் அ. செளந்தரராஜன் தெரிவித்தாா். சிஐடியு 16... மேலும் பார்க்க

2 ஆம் நாளாக ஆசிரியா்கள் மறியல்: 205 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 205 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநி... மேலும் பார்க்க

தருமபுரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட... மேலும் பார்க்க

பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்

பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமா... மேலும் பார்க்க