செய்திகள் :

தோனியின் ’மோர்ஸ் கோட்’ டீ-சர்ட்! அப்படியென்றால் என்ன?

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைவதற்காக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை மாலை சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தோனி அணிந்திருந்த டீ-சர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த புள்ளிகள் மற்றும் கோடுகளை கண்ட ரசிகர்கள் என்னவென்று தெரியாமல் முதலில் குழம்பினர்.

பின்னர், அது ரேடியோ போன்ற தொலைதொடர்புக்காக பயன்படுத்தப்பட்ட ’மோர்ஸ் கோட்’ என்பதை கண்டறிந்து ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

இதையும் படிக்க : கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

கடைசி ஐபிஎல்

2020ஆம் ஆண்டு திடீரென்று இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த சீசனில் கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் கொடுத்துவிட்டு சாதாரண வீரராக தோனி களமிறங்கினார். தொடர்ந்து, இந்த சீசனில் தனக்காக அதிக தொகையை செலவிட வேண்டாம் என்று அணியின் நிர்வாகத்திடம் தெரிவித்த தோனி, வெறும் ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் வீரர்களுடன் இணைய புதன்கிழமை மாலை சென்னைக்கு வருகைதந்தார் தோனி.

அப்போது, அவர் அணிந்திருந்த டீ-சர்ட்டில் ’ஒன் லாஸ்ட் டைம்’ என்று மோர்ஸ் கோட் மூலம் வாசகம் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

இதனை இணையத்தில் பகிர்ந்து, தோனியின் கடைசி ஐபிஎல் இது என்று விவாதித்து வருகின்றனர்.

மோர்ஸ் கோட் என்றால் என்ன?

மோர்ஸ் கோடை 1835 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. புள்ளிகள் மற்றும் கோடுகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு, நீண்ட தூர ரகசிய தொடர்புக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

உலகப் போர் காலங்களில் ரகசிய தகவல் பரிமாற்றத்துக்காக மோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டது. ரேடியோ, டெலிகிராஃப் போன்ற தொலைதொடர்பின் போது, எதிரி நாட்டினர் ஊடுருவி தகவலை கண்டறியாமல் இருக்க அந்த காலகட்டத்தில் மோர்ஸ் கோட் மிகவும் உதவியாக இருந்தது.

மோர்ஸ் கோட் முறையை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையில் பயன்படுத்தியுள்ளனர். உலகப் போர் காலங்களில் விமானிகளிடையே மோர்ஸ் கோட் மூலம் தகவலை பரிமாறினர்.

தற்போதுள்ள விமானிகள் மோர்ஸ் கோட்டை பயன்படுத்துவதில்லை என்றாலும் அவசரகாலங்களில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழக்கும்போது, ரேடியோ மூலம்செய்திகளை பெறுவதற்காக பயிற்சியின்போது மோர்ஸ் கோடை கற்றுக் கொள்கிறார்கள்.

சல்மான் கானின் சிக்கந்தர் டீசர்!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்... மேலும் பார்க்க

சப்தம் மேக்கிங் விடியோ வெளியீடு!

நடிகர் ஆதி, லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தி... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருது வென்ற நடிகர், மனைவி மர்ம மரணம்..!

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெனே ஹேக்மேன், அவரது மனைவி, அவரது நாய் என அனைவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மரணத்துக்கு காரணம் என்னவென்று காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. ... மேலும் பார்க்க

1.34 நிமிட குட் பேட் அக்லி டீசர்..! எத்தனை மணிக்கு தெரியுமா?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் தேதி, நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெ... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: பெரம்பூர் சிவா விஷ்ணு கோயிலில் திரளானோர் சுவாமி தரிசனம்!

சென்னை பெரம்பூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவா விஷ்ணு கோயிலில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்சென்னை பெரம்பூரில் மகா சிவர... மேலும் பார்க்க