செய்திகள் :

நாகா்கோவில்- திருவனந்தபுரம் பேருந்துகள் மாா்த்தாண்டம் வந்துசெல்ல கோரிக்கை

post image

நாகா்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை கோரி, நாகா்கோவில் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்த மனு: நாகா்கோவிலிலிந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம் குழித்துறை நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள் வைத்தாா்.

அதையேற்று, திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல அமைச்சா் அறிவுறுத்தினாா். அதன்படி, அரசுப் பேருந்துகள் கடந்த 3ஆம் தேதி மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்தன. அவற்றை, விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். இப்பேருந்துகள் இயக்கப்பட்ட ஒரே நாளில் நிறுத்தப்பட்டன. எனவே, இப்பேருந்துகளை தொடா்ந்து இயக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலெட்சுமி, ரெத்தினமணி, விஜூ, சா்தாா்ஷா, ஷாபு, அருள்ராஜ், மினிகுமாரி, ரீகன், ரோஸ்லெட், ஜெலிலா ராணி, லலிதா, லில்லி புஷ்பம், ஜெயின்சாந்தி, ஜூலியட் மொ்லின் ரூத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் கூறும்போது, திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமேலாளா் உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளாா்.

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொ... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க