செய்திகள் :

நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?

post image

வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். "நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும்" என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் உண்மையில் நாய்களால் ஆவிகளைப் பார்க்க முடியுமா? இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

லண்டன் ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் மார்க் ஈடன் இதுகுறித்து கூறுகையில், "சமீபத்தில் தந்தையை இழந்த ஒருவர், தன் நாய் தொடர்ந்து படிக்கட்டுகளைப் பார்த்துக் குறைப்பதாகக் கூறினார். அவர் ஏற்கெனவே பேய்களின்மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், தன் நாய் தன் தந்தையின் ஆவியை உணர்வதாக அவர் நம்புகிறார் என்று கூறியிருக்கிறார்.

Dog

அறிவியல் சொல்வதென்ன?

விஞ்ஞானிகள் "நாய்கள் பேயைப் பார்க்கவில்லை, மனிதர்களால் உணர முடியாத சத்தங்களையும், வாசனைகளையும் அவை உணர்கின்றன" என்று கூறுகின்றனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் பிரெஞ்ச் கூறுகையில் "நாய்களுக்கு மனிதர்களைவிட சிறந்த நுகரும் திறனும், கேட்கும் திறனும் உண்டு. எனவே மனிதர்களால் கண்டறிய முடியாத இயற்கையான அசைவுகளைக் கண்டு அவை எதிர்வினையாற்றுகின்றனவே தவிர, இது அமானுஷ்யம் அல்ல" என்று கூறியிருக்கிறார்.

மனிதர்களுக்கு மூக்கில் சுமார் 5 மில்லியன் நுகர்வு செல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், நாய்களுக்கு சுமார் 220 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன. இது மனிதனை விடப் பல மடங்கு அதிகமாம்.

1950-களில் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மிகக் குறைந்த அளவு பூண்டு எண்ணெயைக்கூட நாய்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஆய்வுகளில், புற்றுநோய் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை வாசனை மூலமே நாய்கள் கண்டுபிடிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன், மனிதர்களின் மன அழுத்தத்தைக்கூட நாய்களால் முகர்ந்து உணர முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது, நாய்கள் ஒரு வெற்று இடத்தைப் பார்த்து குரைத்தால், அங்கே பேய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத ஏதோ ஒரு வாசனையோ அல்லது சத்தமோ அங்கே இருக்கிறது என்பதே அறிவியலில் பதிலாக உள்ளது.

மழைக்காலத்தில் வீசும் 'மண் வாசனை' - இதன் பின்னணியில் உள்ள அறிவியல் தெரியுமா?

மழை பெய்யத் தொடங்கும்போது அல்லது மழை வருவதை போன்று இருக்கும்போது ஒரு விதமான வாசனை வருவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். அந்த 'மண் வாசனை' எப்படி உருவாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வெ... மேலும் பார்க்க

ஜப்பானில் புதிய வகை `நீல சாமுராய்' ஜெல்லிமீன் கண்டுபிடிப்பு - மாறிவரும் கடல் நீரோட்டம் காரணமா?

ஜப்பானின் வடக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை நீல நிற 'சாமுராய்' ஜெல்லிமீன், கடல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஜப்பானின் செண்டாய் வளைகுடா பகுதியில்... மேலும் பார்க்க

`பாட்டு கேட்டால் மாடுகள் அதிகம் பால் கறக்குமா?' - அறிவியல் சொல்லும் உண்மை இதுதான்!

மனிதர்களுக்குத் தான் இசை ரசனை இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களுக்கும் இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பா... மேலும் பார்க்க

மனிதர்களைப் போல பூச்சிகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும்; ஆய்வில் வெளியான தகவல்

எறும்புகள், தேனீக்கள், வண்டுகள் என சிறய வகை பூச்சிகளுக்கும் மனிதர்களைப் போலவே வலி, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பூச்சிகள், உள்ளுணர்வு அட... மேலும் பார்க்க

குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Amur Falcon: 150 கிராம்தான் எடை; இந்தியா டு சோமாலியா - 5 நாள்களில் 5000 கி.மீ பயணித்த அமூர் பருந்து

பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் வலசை செல்வதை நாம் அறிவோம். இந்த வலசை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாகசங்கள் நிறைந்தது, சவாலானது, அதீத பொறுமையையும் உழைப்பையும் விடா முயற்சியையும்... மேலும் பார்க்க