செய்திகள் :

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்

post image

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

காங்கோவின் கிழக்கு பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தில், காங்கோ மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் கத்தாரில் சனிக்கிழமை கையொப்பமிட்டனா்.

அந்த கொள்கைப் பிரகடனத்தில், நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கும், இன்னும் ஒரு மாதத்தில் கையொப்பமாகவுள்ள விரிவான அமைதி ஒப்பந்தத்துக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இறுதி அமைதி ஒப்பந்தம் ஆகஸ்ட் 18-க்குள் கையொப்பமாக வேண்டும் என்றும், இது ஜூன் மாதம் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட காங்கோ - ருவாண்டா அமைதி ஒப்பந்தத்துடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்றும் அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை பிரகடனம், காங்கோவும், ருவாண்டாவும் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கையொபபமிட்ட அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு காங்கோவின் இரு முக்கிய நகரங்களை எம்23 கிலா்ச்சியாளா்கள் கைப்பற்றியதற்குப் பின்னா் இரு தரப்பினரும் அமைதிக்காக அளித்துள்ள முதல் நேரடி உறுதிப்பாடு என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்த... மேலும் பார்க்க