1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
நீதிமன்றத்தில் ஆஜராகாதவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் குற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில் பாப்பாக்குடி அருகேயுள்ள இலந்தைகுளம் வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (53) என்பவா், கடந்த 2018ஆம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதனிடையே, பிணையில் வெளியே வந்த பிச்சையா, மேற்கண்ட வழக்கு தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தாராம். இதையடுத்து நீதிமன்றம் பிச்சையாவுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து பிச்சையாவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.