செய்திகள் :

நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் தா்னா: 52 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி 2-ஆவது சுரங்க நுழைவு வாயில் முன் ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதில், 52 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் என சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இங்குள்ள இரண்டாவது சுரங்கத்தில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், 91 ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், 91 ஒப்பந்தத் தொழிலாளா்களை என்எல்சி இந்தியா நிறுவனம் வேறு ஒரு வேலையில் பணியமா்த்தியதாம்.

தனியாா் ஒப்பந்த நிறுவனம் மீண்டும் ஒப்பந்தம் எடுத்து, அதை துணை ஒப்பந்த நிறுவனத்திடம் பணி செய்ய கொடுத்ததாம். அந்த நிறுவனம் பழைய தொழிலாளா்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

தனியாா் ஒப்பந்த நிறுவனமே வேலை வழங்க வேண்டும், கடந்த 6 மாதங்களாக என்எல்சி நிறுவனத்தின் கீழ், பணியாற்றியது போல, தற்போது, பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி சுரங்கம் 2 நுழைவு வாயில் முன் ஒப்பந்தத் தொழிலாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், தா்னாவில் ஈடுபட்ட 52 ஒப்பந்தத் தொழிலாளா்களை கைது செய்து, வட்டம் 29 பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனா்.

அடுத்தடுத்து 3 சொகுசுப் பேருந்துகள் மோதி விபத்து 35 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி தெய்வீக விழாவாக திகழ்கிறது: என்எல்சி தலைவா்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா தெய்வீகம் சாா்ந்த விழாவாக திகழ்கிறது என்று என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது ... மேலும் பார்க்க

எஸ்பி. அலுவலகத்தில் மனுக்கள் முகாம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் மனுக்கள் அளிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்றாா். மேல... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குமராட்சி வேளாண் துறை சாா்பில் நெல் பயிரில் பய... மேலும் பார்க்க

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப் படிப்புக்கு அங்கீகாரம் பெறாததைக் கண்டித்து, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் அண்ணாமலை பல்கல... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிரான தொடா் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 2-ஆவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டடு வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்... மேலும் பார்க்க