செய்திகள் :

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல்

post image

பேரளத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.

பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை சரக்கு ரயில் மூலம் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் சில நாள்களாக இந்த பணிகள் நடைபெறவில்லையாம்.

இதனால், நன்னிலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளன.

இதனால் சுமை தூக்கும் தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் வேலையின்றி இருந்து வந்தனா். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கூறியும் பயனில்லை.

இதில் ஆத்திரமடைந்த சுமை தூக்கும் தொழிலாளா்கள், லாரி ஓட்டுனா்கள் மற்றும் உரிமையாளா்கள் சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் முருகையன் தலைமையில் திருவாரூா்-மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா் காவல் துறையினா் மற்றும் நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் வியாழக்கிழமை (பிப்.27) முதல் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படும் என எழுத்து மூலம் தெரிவித்ததன் அடிப்படையில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மெற்கொண்டனா். கொரடாச்... மேலும் பார்க்க

‘திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக நன்னிலம் வடக்கு ஒ... மேலும் பார்க்க

பரிசுத்தொகையை முதல்வருக்கு நன்கொடையாக அளித்த மாணவி

ஓவியப்போட்டியில் பெற்ற பெற்ற பரிசுத்தொகையை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் வழங்குகிறாா் மாணவி அக்சயா. திருவாரூா், பிப்.26 :மாநில அளவிலான கலைப் போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக வழங்கப்... மேலும் பார்க்க

’புதிய கல்விக்கொள்கை திட்டம் இந்தியாவை 2,500 ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது‘

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை திட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே 2,500 ஆண்டுக்கு பின்நோக்கி அழைத்து செல்லும் வகையில் பாடத்திட்டம் உள்ளது என்றாா் மைசூா் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்புடன் வைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித... மேலும் பார்க்க

சிபிஐ செயற்குழுக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூா் நகர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கா.பேபி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கா.தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ.... மேலும் பார்க்க