செய்திகள் :

நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் கைது!

post image

நோட்டுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து 3 மாணவிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை புணே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இந்த பையில் ஆவணங்கள் இருப்பதாக பயண முகவர் தெரிவித்ததாகவும் மாணவிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் மூலம் கடத்தல்

புணேவில் இருந்து மூன்று மாணவிகள் 7 நாள்கள் பயணமாக துபைக்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோத ஹவாலா பணத்தை மாணவிகள் கடத்திச் சென்றதாக புணே சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாணவிகளின் நோட்டுபுத்தகங்களுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 3.47 கோடி) கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக, துபை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு மூன்று மாணவிகளையும் திருப்பி அனுப்ப புணே சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இதனடிப்படையில் மூன்று மாணவிகளும் புணே விமான நிலையத்துக்கு பிப். 17ஆம் தேதி வந்த நிலையில், அவர்களிடம் இருந்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இருவர் கைது

புணேவைச் சேர்ந்த குஷ்பு அகர்வால் என்ற பயண முகவர், மாணவிகள் துபைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அவர்கள் இண்டிகோ விமானத்தில் துபை செல்வதற்கு முன்னதாக கடைசி நிமிடத்தில் ஒரு பேக்கை அவர்களிடம் கொடுத்த குஷ்பு அகர்வால், இதில் தனது அலுவலக ஆவணங்கள் இருப்பதாகவும் இதனை துபையில் அழைத்துச் செல்பவரிடம் கொடுக்குமாறும் அகர்வால் கேட்டுள்ளார்.

அவர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பேக்கை துபைக்கு கொண்டு சென்றதாக மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பயண முகவர் அகர்வாலை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மும்பையை சேர்ந்த அந்நிய செலவாணியில் ஈடுபடும் முகமது அமீர் என்பவரை கைது செய்தனர்.

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் மகா கும்பமேளா: பிரதமர் மோடி

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் நிறைவடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ல் தொடங்கி 45 நாள்கள் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வு... மேலும் பார்க்க

தில்லி பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தடை: அதிஷி

தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு "சர்வாதிகாரத்தின் அனைத்து வரம்ப... மேலும் பார்க்க

தில்லியில் அசைவம் சாப்பிட்ட மாணவிகள் மீது தாக்குதல்!

தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் அசைவம் சாப்பிட்ட மாணவிகளை ஏபிவிபி அமைப்பினர் தாக்கியதாக எஸ்எஃப்ஐ அமைப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.அதேபோல், சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்த மாணவர்களுக்கு... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா: கூட்டுக்குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை ஒ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகிய... மேலும் பார்க்க

பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பஞ்சாபில் அரசு-அரசு உதவி பெறு... மேலும் பார்க்க