செய்திகள் :

`நோய் பாதித்த தெரு நாய்களைக் கருணைக் கொலை' - கேரள அரசின் அதிரடி முடிவு; காரணம் என்ன?

post image

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் மரணமடையும் அதிர்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைபெற்றவர்கள் இரண்டரை லட்சம்பேர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் உள்பட சுமார் 21 பேர் நாய்க்கடியால் மரணமடைந்த சோகம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. இதையடுத்து நோய் பாதித்த தெரு நாய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைப் பரப்பும் தெருநாய்களையும் கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு. இதுகுறித்து கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே கருணைக்கொலை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நோய் பாதித்த தெரு நாய்களுக்கு கருணைகொலை செய்வது பற்றி அமைச்சர்கள் சிஞ்சு ராணி, எம்.பி.ராஜேஷ் ஆகியோர் அளித்த பேட்டி

நோய் பாதித்த நாய் என்பதை கால்நடை மருத்துவர் உறுதிபடுத்தி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே கருணைக்கொலை செய்யப்படும். அதற்கு சட்டம் உள்ளது. கருணைக்கொலை செய்வதற்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இதற்காக திருவனந்தபுரத்தில் உடனடியாக போர்ட்டபிள் ஏ.பி.சி மையம் திறக்கப்படும். கேரளா முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் 152 போர்ட்டபிள் ஏ.பி.சி மையங்கள் திறக்கப்பட உள்ளன. 120 நாட்களில் அதற்கான இடம் தேர்வு செய்ய வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சையும் அளிக்கப்படும். நாய்களைப் பிடிப்பதற்காக பயிற்சிபெற்ற 158 பேர் உள்ளனர். மேலும் பலருக்கும் பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஏ.பி.சி சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

வரும் ஆகஸ்ட் மாதம் தெரு நய்களுக்கு தடுப்பூசி போடப்படும். செப்டம்பர் மாதம் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கும், லைசென்ஸ் எடுப்பதற்கும் முகாம்கள் நடத்தப்படும். இப்போது பலரும் லைசென்ஸ் எடுத்துள்ளனர். தொடர்ந்து லைசென்ஸ் எடுப்பதற்கான முகாம்கள் நடத்தப்படும்.  வளர்ப்பு நாய்களுக்கு `எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்படும்.

தெரு நாய்கள்

அதன்மூலம் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களின் விபரங்களும், தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க முடியும். நோய் பாதித்த தெரு நாய்களை கருணைக் கொலை செய்வதற்காக அமைக்கப்படும் போர்ட்டபிள் ஏ.பி.சி மையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளுக்கான ஏ.பி.சி சட்டத்தில் மேலும் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் வைக்க உள்ளோம்" என்றார்.

புதுவை: "முதல்வர் ரங்கசாமி இறந்தால் அவரை சித்தராக வழிபடுவர்" - அமைச்சர் ஜான்குமார் சர்ச்சை பேச்சு

புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி, சேலம் அப்பா பைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர். கோரிமேட்டில் சேலம் அப்பா பைத்தியம் சாமிகளுக்கு கோயில் கட்டி, தினம்தோறும் பூஜைகளும், அன்னதானமும் செய்து வருகிறார். அதனால் மு... மேலும் பார்க்க

"தெம்பு, திராணி, முதுகெலும்பு இருந்தால் பதில் சொல்லுங்கள்" - எடப்பாடி பழனிசாமிக்கு முத்தரசன் சவால்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடுகோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று தொடங்கியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்திய... மேலும் பார்க்க

MK Muthu: ஸ்டாலின் டு விக்ரம்... மு.க. முத்துவிற்கு கட்சியினர், குடும்பத்தினர் அஞ்சலி | Photo Album

MK Muthu: ``தாய்-தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்'' - மு.க.ஸ்டாலின்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3K... மேலும் பார்க்க

மதிமுக: "திமுக-வை ஆதரிப்பதாக இருந்தால் எதற்குத் தனிக்கட்சி?" - வைகோவிற்கு திருப்பூர் துரைசாமி கேள்வி

மதிமுக-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாவைத் துரோகி என்று மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில நாள்களுக்கு முன் வெளிப்படையாகப் பேசினார்.... மேலும் பார்க்க

MK Muthu: ``மு.க.முத்து மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்..'' - செல்வபெருந்தகை இரங்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் ... மேலும் பார்க்க