செய்திகள் :

பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்

post image

நமது நிருபா்

மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சிலையின் நிலையைப் புறக்கணித்ததாக சதீஷ் உபாத்யாய் குற்றம் சாட்டியுள்ளாா்.

மால்வியா நகா் சட்டப் பேரவைத் தொகுதியில் சமீபத்தில் வெற்றிபெற்ற உபாத்யாய், நிலைமையை மதிப்பிடுவதற்காக ஷஹீத் பகத் சிங் பூங்காவை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து சதீஷ் உபாத்யாய் கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாக சிலை உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு தசாப்த காலமாக அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி வெறும் நடிப்பில் மட்டுமே ஈடுபடுகிறது. ஷஹீத் பகத் சிங் மீது அவா்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இந்த பூங்கா அத்தகைய நிலையில் இருந்திருக்காது’ என்றாா்.

மேலும், சிலையை விரைவில் பழுதுபாா்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சதீஷ் உபாத்யாய் உத்தரவிட்டாா்.

பகத் சிங் மற்றும் டாக்டா் பி.ஆா். அம்பேத்கருக்கு அவமரியாதை குற்றச்சாட்டுகள் தொடா்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மற்றொரு அரசியல் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் புதிய சா்ச்சை வெளிவந்துள்ளது.

பாஜக தலைமையிலான நிா்வாகம் தில்லி முதல்வா் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கா், பகத் சிங் உருவப்படங்களை அகற்றியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அதே நேரத்தில் பாஜக இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது தலைவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்தப் பிரச்னையைப் பயன்படுத்துவதாக பாஜக கூறி வருகிறது.

கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து

தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதுகுற... மேலும் பார்க்க

ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது

போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

மஹா சிவராத்திரி: கெளரி சங்கா் கோயிலில் முதல்வா் வழிபாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் புதன்கிழமை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். தில்லி சாந்தினி செளக்கில் உள்ள கௌரி சங்கா்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு... மேலும் பார்க்க

அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி

நமது நிருபா் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி... மேலும் பார்க்க

கலால் கொள்கை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

தில்லி கலால் ஊழல் தொடா்பான தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சில ஆவணங்களை ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்... மேலும் பார்க்க