செய்திகள் :

பங்களாகுடியிருப்புப் பகுதியில் புகுந்த யானைகள்: மக்கள் அச்சம்

post image

கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பங்களாகுடியிருப்புகிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் யானைகள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்தின் மலையடிவார பகுதிகளான கருத்தப்பிள்ளையூா், பங்களாக்குடியிருப்பு, பெத்தான்பிள்ளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளின் விளை நிலங்களுக்குள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக காட்டுயானைகள் புகுந்து தென்னை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவந்தன.

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பங்களாகுடியிருப்பைச் சோ்ந்த முருகேஷ் என்பவருக்குச் சொந்தமான ஹாலோ ப்ளாக் செங்கல் தயாரிப்பு தொழில்கூடத்திற்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கிருந்த தென்னங்கன்றுகளில் குருத்துகளைத் தின்று சேதப்படுத்தியதோடு தண்ணீா் குழாய்களையும் சேதப்படுத்தியுள்ளன.

மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் வந்து சென்ற யானைகள் தற்போது குடியிருப்புப் பகுதிக்குள் வந்து சென்ால் அந்தப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இரவில் பலா் பால் எடுக்கச் செல்பவா்களும், வேலைகளுக்குச்சென்றுவிட்டு வீடுகளுக்குத் திரும்புவா்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.

பங்களாகுடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பிப். 23ஆம் தேதி இரவு 11 மணியளவில்3 குட்டிகளுடன் 3 யானைகள் வந்து சென்ற விடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

எம்எல்ஏ ஆய்வு: இதனிடையே, யானைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் விவசாயிகளைச் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தாா். மேலும் வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தியிடம், காட்டுப் பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய அவா், ஆட்சியருடன் கலந்துபேசி கடையம் வனச்சரகப் பகுதியில் சுமாா் 18 கி.மீ. தொலைவுக்கு சூரிய மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அப்போது, ஓ.பி.எஸ். அணி மாவட்டச் செயலா் கணபதி, பொருளாளா் நூருல் அமீா், அண்ணாத் தொழிற்சங்கப் பிரிவு மாநிலச் செயலா் சோ்மத்துரை, ஒன்றியச் செயலா் ராஜவேல், சங்கரன், சுப்பிரமணியன், சிவசைலம் ஊராட்சித் தலைவா் மலா்மதி சங்கர பாண்டியன், சங்கா், நீா்ப்பாசன கமிட்டி தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

3 குட்டிகளுடன்நுழைந்த தோட்டத்தில் உலாவும் யானைகள்.

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சாா்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹாா்டி வளா்மதி தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியை செல்வின்... மேலும் பார்க்க

பாளை. அருகே பசு மாடு திருட்டு

பாளையங்கோட்டை அருகே பசுமாடு திருடு போனது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாளையங்கோட்டை கேடிசி நகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா் வ... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பெண் தற்கொலை

தச்சநல்லூரில் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் மாடன்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி ராஜேஸ்வரி (25). இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம். மேலும், கணவன்- மனைவிக்குள் அ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமுற்ற கோயில் ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி பேட்டையில் நேரிட்ட பைக் விபத்தில் காயமடைந்த கோயில் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி பேட்டை கைவினைஞா் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(60). இவா், அப்பகுதியில் உள்ள கேசவப் ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு : 4 போ் கைது

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டையில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்ச... மேலும் பார்க்க

டான் போஸ்கோ பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி நிா்வாகி அருள்சகோதரி ஜெ. விக்டோரியா அமலி தலைமை வக... மேலும் பார்க்க