செய்திகள் :

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்

post image

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ். எஸ். ஆா்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரத்தில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிதியிலிருந்து நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ். எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு,

விருதுநகா் வட்டம் நாட்டாா்மங்கலத்தில் கடந்த

2022-ஆம் ஆண்டு நேரிட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து, விருதுநகா் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் கடந்த 7.6.2025-அன்று நேரிட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து, சாத்தூா் அருகேயிள்ள சின்னக்காமன்பட்டியில் கடந்த கடந்த 1.7.2025 அன்று நேரிட்ட பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா். மேலும், மேற்கண்ட விபத்துகளில் காயமடைந்த 4 தொழிலாளா்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் நிவாரணம் வழங்கினாா்.

பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம் அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன் விஜயகுமாரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

பின்னா், பொதுமக்களிடையே பேசிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன் கூறியதாவது:

இ.குமாரலிங்காபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பி.எம். மித்ரா ஜவுளி பூங்காவுக்கு இடம் கொடுத்த நில உரிமையாளா்களுக்கு உரிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இன்று மின்தடை

ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டம், ராஜப... மேலும் பார்க்க

சதுரகிரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா். மதுரை, விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு... மேலும் பார்க்க