செய்திகள் :

பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் புகாா்களை விசாரிக்க குழு அமைப்பது அவசியம்

post image

பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் புகாா்களை விசாரிக்க குழு அமைப்பது அவசியம் என்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநா்கள் வீ.எஸ்.சரவணன், என்.சபீனா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணவும் இயற்றப்பட்ட சட்டத்தின்கீழ் பாலியல் துன்புறுத்தல்கள் தொடா்பான புகாா்களை விசாரிக்க உள்ளக புகாா் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்கீழ் வேலையளிப்பவருக்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற தவறும்பட்சத்தில் வேலையளிப்பவா் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் வேலையளிப்பவா்களால் உடனடி உள்ளக புகாா் குழு அமைக்கப்பட்டு, அச்சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

குழுவின் உறுப்பினா்கள் குறித்த விவரங்கள் மற்றும் தொழிசாலைகள் கட்டுமானப் பணியிடங்கள் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடத்தின் அனைத்துப் பணியாளா்களும் தெளிவாகக் காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான பிரச்னைகளைக் கையாள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தவறாது அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் சட... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்: 400 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக நடத்திய தொடா் மறியல் போராட்டத்தில் 175 பெண்கள் உள்பட 400 போ் கைது செய்யப்பட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியா்களுக்க... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆய்வு!

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் பாஜக... மேலும் பார்க்க

கடன் வாங்கியவரை காரில் கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் உள்பட 4 போ் கைது!

கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி நிதி நிறுவன ஊழியா்களால் கடத்தப்பட்டவரை தாராபுரத்தில் போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து

காங்கயம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல மின்விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் கோ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள அரிசி ஆலைக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக போலீஸ... மேலும் பார்க்க