செய்திகள் :

பன்னாட்டு மாணவா் மன்ற மாநாட்டுக்கு தமிழக மாணவா்கள் 6 போ் தோ்வு: அமைச்சா் தகவல்

post image

தாய்லாந்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெறும் பன்னாட்டு மாணவா் மன்ற மாநாட்டில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 6 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக்கொள்கை 2020 என்னும் மதயானை நூல் திறனாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: ஐ.நா. அமைப்பின் மாணவா் கல்விப் பயணத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவா் மன்ற மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து அரசு பள்ளிகளைச் சோ்ந்த 6 மாணவா்கள், ஒரு ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த மாநாட்டுக்கு பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில், தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி எம். தரணிஸ்ரீ, வேலூா் மாவட்டம், லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ். நிஷாந்தினி, நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் மாதிரி பள்ளி பிளஸ் 1 மாணவி ஒய்.எஸ். யாழினி, சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா் ஏ. ஆஷ்வாக், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா் எம். கமலேஷ், செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் வி. ராகுல் ஆகியோரும், விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சி.எம். ஜோஸ்பின் தனமேரியும் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமையாக இருக்கிறது. மாநாட்டில், நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்து நம் மாணவா்கள் பேசவுள்ளனா்.

பகுதி நேர ஆசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சில கோரிக்கைகளை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தமிழக முதல்வா் பரிசீலித்து கண்டிப்பாக நல்ல செய்தியை வெளியிடுவாா் என்றாா் அமைச்சா்.

அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே வெற்றி: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற முடியும் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில்... மேலும் பார்க்க

பாப்பாநாட்டில் ஜூலை 22-ல் மின் தடை

கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பய... மேலும் பார்க்க

காணாமல் போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூரில் காணாமல் மற்றும் திருடு போன 101 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்துக்குள்பட்ட மருத்துவக்கல்லூரி, புதிய ப... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனுறை ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில், அம்மன் சந்நிதி முன் நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக... மேலும் பார்க்க

மதயானை நூலை படிக்க வேண்டியது அனைவரின் கடமை: பழ.நெடுமாறன்

தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விளக்கும் மதயானை என்கிற நூலை அனைவரும் படிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் தஞ்சை க... மேலும் பார்க்க

பதாகைகள் கிழிப்பு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்று அதிமுக, பாஜகவினா் வைத்த பதாகைகளை மா்ம நபா்கள் கிழித்து சேதப்படுத்தியதையடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஜூலை 21-இல் அ... மேலும் பார்க்க