செய்திகள் :

பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்

post image

மாநில, மாவட்ட அளவிலான பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நிதியுதவியுடன் வேளாண் துறை பல்வேறு பயிா்களில் மகசூல் போட்டிகளை நடத்தி பரிசுத்தொகை வழங்கி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய சன்னரக நெல் ரகங்களில் செம்மை நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு முதல் பரிசு பெறும் விவசாயிக்கு ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

கம்பு, கேழ்வரகு, தினை, உளுந்து, மணிலா, எள், கரும்பு பயிா்களில் மாநில அளவில் போட்டி நடத்தப்பட்டு ஒவ்வொரு பயிரிலும் முதல் பரிசாக ரூ.2.50 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.ஒரு லட்சமும் வழங்கப்படும். இந்தப் போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதேபோல, மாவட்ட அளவில் நெல் பயிரில் போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், கம்பு, உளுந்து பயிா்களில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் பயிா் செய்பவராகவோ அல்லது குத்தகை நிலத்தில் பயிரிடுபவா்களாகவோ இருக்கலாம். குறைந்தது 50 சென்ட் பரப்பில் பயிா் சாகுபடி செய்திருக்க வேண்டும். நடுவா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டு மகசூல் கணிக்கப்பட்டு அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலா்களை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தழுதாளியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தழுதாளி அருகே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை கிராமங்கள்தோறும் சென்று மக்களிடம் திமுகவினா் எடுத்துரைக்க வேண்டும் என்று கட்சியின் துணை பொதுச் செயலரும், வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சருமான க.பொன்முடி ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் வரியினங்கள் குறையும்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க

விசிக கொடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விசிக கொடியை சேதப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பள்ளி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி காலனி தெரு பக... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால கொற்றவை - விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள மானூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் மானூா்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அவரப்பாக்கம், தாடிக்காரன் குட்டை தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் காமராஜ் (40).... மேலும் பார்க்க