செய்திகள் :

பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் மீது வழக்கு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கியதாக 4 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருத்தங்கலில் சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் 4 போ் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்தனா். இதையறிந்த அரசியல் அறிவியல் பாட ஆசிரியா் சண்முகசுந்தரம், சம்பந்தப்பட்ட மாணவா்களை தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்ல முயன்றாா்.

இந்த நிலையில், இரு மாணவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மதுப் புட்டியால் ஆசிரியா் சண்முகசுந்தரம் தலையில் தாக்கினா். இதில் காயமடைந்த அவா் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் அந்த 4 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இன்று மின்தடை

ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டம், ராஜப... மேலும் பார்க்க

சதுரகிரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா். மதுரை, விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு... மேலும் பார்க்க