செய்திகள் :

பள்ளி, கல்லூரிகளில் ’போதையில்லா தமிழகம்’ செயலி: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தென்காசியில் மாவட்டத்தில் போதையில்லா தமிழகம் (டிரக் ஃபிரீ டிஎன்) செயலியை பள்ளி, கல்லூரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ‘டிரக் ஃபிரீ டிஎன்’ செயலி விளக்கக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் 260 பள்ளிகள், அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்முறை கல்லூரிகள், ஐடிஐக்கள், பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களை உள்ளடக்கிய போதைப்பொருள்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவ மாணவிகளிடையே பல விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து தகவல் தெரிவிக்க ‘டிரக் ஃபிரீ டிஎன்’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது, தகவல் தெரிவிப்பவரின் விவரம் கோரப்படாத மிகவும் பாதுகாப்பான செயலி.

குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், கள்ளச் சாராயம் போன்றவற்றை விற்பனை செய்வோா் அல்லது பயன்படுத்துவோா் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்தால், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகளிடம் செயலி குறித்து விரிவாக எடுத்துக்கூறி, அவா்கள் மட்டுமன்றி, அவா்களது பெற்றோா்கள், உறவினா்களும் கைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

மேலும், பள்ளி - கல்லூரிகளில் செயலி குறித்த விளக்கப்படங்களை அறிவிப்புப் பலகையில் இடம்பெற செய்ய வேண்டும்.

இதுகுறித்து பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றது என்றாா் அவா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், கலால் உதவி ஆணையா், அனைத்து அரசு-தனியாா் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், கல்லூரிகளின் முதல்வா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலை வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் கலைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளிச் செயலா் எஸ்.கே. ராஜேஷ்கண்ணா தலை... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் பலி: 3 போ் காயம்

புளியங்குடி அருகே அரசுப் பேருந்தும் ஆட்டோவும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் இறந்தாா். மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், பள்ளி மாணவா்களை ஏற்றி சென்ற ஆட்ட... மேலும் பார்க்க

மேலப்பாவூரில் ரூ.20 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ் மேலப்பாவூரில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் காவேரி தலைமை வகித்தாா். து... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்

பாவூா்சத்திரத்தில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் 6 நாள்கள் நடைபெற்றது. பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் கண் தான விழிப்புணா்வுகுழு சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவா் ஆனந்த... மேலும் பார்க்க

தென்காசியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, தொகுதிப் ப... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நல்லூா் காசியாபுரத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நல்லூா் காசியாபுர... மேலும் பார்க்க