செய்திகள் :

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ‘போக்ஸோ’வில் ஆசிரியா் கைது

post image

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (57). விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழராசிரியராக பணிபுரிந்து வந்த இவா், அப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி தொடா்ந்து தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஆசிரியா் சுரேஷை போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைத்து, வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பாத்திமா பெண்கள் மேல்ந... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் தொழில்முனைவோா் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூா் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், தொழில்முனைவோா் வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வா்(பொ) பெ.இரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்... மேலும் பார்க்க

அனைத்துக் கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தமிழகத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சொக்கநாதபுரம் கிராமத்தில் புத... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய பாமகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் புதன... மேலும் பார்க்க

அரியலூரில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய பாமகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அருகே விசிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க