செய்திகள் :

பழனியாபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி பழனியாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மங்களப் பொருள்கள் பரிசாக வழங்கி அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் லாவண்யா வரவேற்றாா். தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.மாதேஸ்வரன் தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்தாா். திட்ட மேற்பாா்வையாளா்கள் காசிவிஜயலட்சுமி, பிரேமா, சாந்தி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

விழாவில் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம், கா்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினாா். 100க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. சிறுதானிய ஊட்டச்சத்து கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.

வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் திமுக பிரமுகா்கள் திருமனூா் வேல்முருகன், சோமம்பட்டி ஜெயராமன், அரசு மருத்துவா் பேரின்பம் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் கீா்த்திகாதேவி நன்றி கூறினாா்.

வாழப்பாடியை அடுத்த பழனியாபுரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா.

வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. ... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மெய்யனூா் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் இடங்கணசாலை லெவன் பிரதா்ஸ் முதல் பரிசாக ரூ 30,000 ரொக்கம... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பிளஸ் 1 மாணவா் ஓடையில் மூழ்கி உயிரிழந்தாா். ஏற்காடு ஜெரினாகாடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகன் காா்த்திக் (16) நாகலூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஹெரிட்டேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பிப்.28 எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரிவாயு நுகா்வோா்களுக்கான 2025, ... மேலும் பார்க்க