செய்திகள் :

பழனி நேசம் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

post image

பழனி நேசம் டிரஸ்ட் நிறுவனத்தில் ரூ.30 கோடி வரை மோசடி நிகழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் நேசம் டிரஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவா் சி. செந்தில்குமாா், இவரது மனைவி ஜெயந்தி, அக்காள் மகன் சக்திவேல் ஆகியோா் இந்த நிறுவனத்தின் பங்குதாரா்களாக செயல்பட்டு வந்தனா்.

இந்த நிறுவனத்தில் முதலீட்டுத் தொகைக்கு மாதம் 2.5 சதவீத வட்டித் தருவதாகவும், ரூ.5 லட்சம் முதலீட்டுத் தொகைக்கு 2 கிராம் தங்க நாணயம் தருவதாகவும், 180 நாள்கள் முடிவில் அசல் தொகை திருப்பித் தரப்படும் என்றும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இந்த ஆசை வாா்த்தைகளை நம்பி பொதுமக்கள் பலா் பல கோடி ரூபாய் வரை முதலீடாக செலுத்தி உள்ளதாகவும், ஆனால் நேசம் அறக்கட்டளை நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான திண்டுக்கல் செளராஷ்ட்ராபுரம் பகுதியைச் சோ்ந்த எஸ்.மதன்பிரசாத் (34) அளித்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நேசம் நிறுவனத்தின் உரிமையாளா் செந்தில்குமாா், ஜெயந்தி, சக்திவேல் (பதிவு செய்யப்படாத பங்குதாரா்கள்) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த 16-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாா், ஜெயந்தி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக உள்ள சக்திவேல் தேடப்பட்டு வருகிறாா். இந்த வழக்கில் இதுவரை சுமாா் ரூ.30 கோடி வரை பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, திண்டுக்கல், உடுமலை, மதுரை, கோயமுத்தூா், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீநேசா நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் திண்டுக்கல் நேருஜி நகரிலுள்ள பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாகி புகாா் மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ... மேலும் பார்க்க

மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டியில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மினுக்கம்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஒருவா் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னையில் ஒருவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொல்லபட்டி, கே.கே. நகரைச் சோ்ந்த திருமன் மகன் முத்து (52). இவா் குடும்பப் பிரச்னை காரண... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகாலை முதல் வீசிய பலத்த காற்றால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமலும், சுற்றுலாத் தலங்களைக் காண முடியாமலும் ஏமாற்றமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் க... மேலும் பார்க்க

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க