செய்திகள் :

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

post image

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக்கத்தால் அதீத மழைப்பொழிவும் வெள்ளமும் ஏற்படுவது வாடிக்கை. இதனால் ஏற்படும் இயற்கை சேதங்களால் பாகிஸ்தானில் பரவலாக மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். நிகழாண்டு பருவமழை ஜூன் பிற்பகுதியில் தொடங்கிய நிலையில், சுமார் 100 குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்.டி.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக, கைபெர் பாக்டுன்க்வா மாகாணத்தில் 40 பேரும், சிந்து மாகாணத்தில் 21 பேரும், பலோசிஸ்தானில் 16 பேரும், இஸ்லாமாபாத்தில் 1 மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரப் பகுதிகளில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுக்கு வெவேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பருவமழையின் தீவிரத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சேதங்களால் வீடுகள் தரைமட்டமானதில் 118 பேரும், பெருவெள்ளத்தில் சிக்கி 30 பேரும், மின்னல் நிலச்சரிவு உள்ளிட்ட பிற காரணங்களாலும் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 182 குழந்தைகள் உள்பட 560 பேர் காயமடைந்துமுள்ளனர்.

Monsoon mayhem: Over 200 dead, 560 injured as relentless rains lash Pakistan

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இ... மேலும் பார்க்க

பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடு... மேலும் பார்க்க

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர்... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க